அத்துடன் அவருடன் பூர்வீக வீட்டை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தியதையடுத்து, உயிருக்கு பயந்து சொந்த நாட்டிலேயே தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய அவல நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.
அதேசமயம் அவர் வெளிநாட்டு தப்பி சென்று விட்டார் எனவும்,நைஜீரியா நாட்டில் அவர் தஞ்சம் அடைந்திருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகின. இல்லை… இல்லை.. , ராஜபக்சேவும், அவரது குடும்ப உறுப்பினர்களும் இந்தியாவில் அடைக்கலம் புக உள்ளனர் என்றும் தகவல் பரவின.
இந்த தகவல்களை மறுத்த ராஜபக்சேவின் மகன் நாமல், தானும் , தமது தந்தையும் நாட்டைவிட்டு வெளியேற மாட்டோம் என்று கூறி, இந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றார்.
இதனிடையே, மகிந்த ராஜபக்சே, எம்பி ஜோன்ஸ்டன் பெராண்டோ உள்ளிட்டோர் வெளிநாடுகளுக்கு செல்ல கடை விதிக்க வேண்டும் என கோரி சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் கொழும்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, எம்பி ஜோன்ஸ்டன் பெராண்டோ உள்ளிட்டோர் நாட்டை விட்டு வெளியேற கூடாது என்றும், இவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாகவும் உத்தரவிட்டுள்ளது.