இந்த நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கே வருகிற 13ஆம் தேதி (நாளை) பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் கோத்தபய ராஜபக்சே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அடுத்த சில மணி நேரங்களில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, இலங்கையின் புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை இந்த வார இறுதிக்குள் கோத்தபய ராஜபக்சே அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டது. 225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை புதிய அமைச்சரவை பெரும்பான்மையைக் கைப்பற்றும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், சிங்கள, தமிழ், முஸ்லிம் எம்.பி.க்கள் பெரும்பாலானோர் ரணில் விக்ரமசிங்கேவை ஆதரிக்க முன்வந்துள்ளாதாக கூறப்படுகிறது. பிரதமர் பதவியை ஏற்குமாறு பல அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் அதிபர் கோத்தபய ராஜபக்சே கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அதனை அவர்கள் நிராகரித்துள்ளதாக அந்நாட்டு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.