இந்த நிலையில் நாட்டின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நேற்று பொறுப்பேற்று கொண்டனார். அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் நாட்டின் 26 ஆவது பிரதமராக ரணில் பொறுப்பேற்று கொண்டுள்ளார். அவரது தலைமையில் 15 பேர் கொண்ட அமைச்சரவையும் விரைவில் பொறுப்பேற்க உள்ளது.
ரணில் பிரதமராக பொறுப்பேற்றதும் தமது முதல் வெளிநாட்டு பயணமாக அவர் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளயாகியுள்ளது. இந்த மாத இறுதியில் அவர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வார் என தெரிகிறது.
இந்த பயணத்தின்போது இந்தியாவிடம் கூடுதல் கடனுதவி பெறுவது, தொழில் முதலீடு, இருதரப்பு உறவு உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களுடன் ரணில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலலங்கைக்கு இந்தியா ஏற்கெனவே ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள், ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் என இரு தவணைகளாக கடனுதவி அளித்துள்ளது. அத்துடன் தமிழக அரசு அரிசி, மருந்து பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.